எரிச்சலை உண்டாக்கும் வியர்க்குரு
பொதுவாக கோடைகாலத்தில், வியர்க்குரு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரைக்குமே பிரச்சனையாகத் தான் இருக்கும். வியர்க்குரு வந்து விட்டால், அது சருமத்தை ஊசியால் குத்துவது போல் இருப்பது மட்டுமன்றி, எரிச்சலையும் தரும். வியர்க்குரு வந்தால், உடல் முழுவதிலும் அலர்ஜி போல் வந்து புண்களாக மாறி விடும். சிலருக்கு முகத்திலும் வியர்க்குரு வரும். அச்சமயங்களில், அவர்கள் வெளியில் செல்வதற்கு கூட தயக்கம் காட்டுவார்கள்.