- மழைக்காலத்தில் குழந்தைகளை பாதுகாப்பது ரொம்பவே முக்கியம். எனவே இந்த சீசனில் அவர்களுக்கு குளிர்ச்சிக்கு இதமான ஆடைகளை அணிய வேண்டும்.
- குளிர்ந்த நீருக்கு பதிலாக சூடான நீரை குடிக்க கொடுக்க வேண்டும். அதுபோல எப்போதுமே சூடான உணவுகளை மட்டுமே கொடுக்கவும்.
- மழைக்காலங்களில் வீட்டை சுற்றி மழை நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் மழை நீரில் கொசுக்கள் உற்பத்தி அதிகமாக இருக்கும். அவை டெங்கு, மலேரியா போன்ற ஆபத்தான நோய்களை ஏற்படுத்தும்.