காலை உணவில் புரதச்சத்து அதிகம் இருக்கும் உணவுகளை உண்ணலாம். சாப்பிட்ட பின் குளுக்கோஸ் அளவை ரொம்பவும் அதிகரிக்காமல் கட்டுக்குள் வைக்க புரதம் நிறைந்த காலை உணவு உதவும். புரதம் செரிமானத்தை மெதுவாக்குவதால் பசியை கட்டுக்குள் வைக்கலாம். காலை உணவில் முட்டை, யோகர்ட், பன்னீர் ஆகிய புரத உணவுககை எடுக்கலாம். காலை, மதியம், இரவு மூன்று வேளைகளிலும் சாப்பிட்ட பின் நடப்பது நல்லது. சாப்பிட்டதும் 10 நிமிடங்கள் நடப்பது இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது.