தூக்க மாத்திரைகள் அடிக்கடி உண்பதால் மூளையின் செயல்பாடு மந்தமாகிறது. நினைவாற்றல், செறிவு பிரச்சனைகளுக்கு காரணமாகும். நீங்கள் சில விஷயங்களை மெதுவாக மறக்க ஆரம்பிக்கிறீர்கள். சாதாரண விஷயங்களை கூட எளிதில் புரிந்து கொள்ள முடியாமல் திணறி போவீர்கள். மறதி ஏற்படும்.
அடிக்கடி தூக்க மாத்திரைகளை உண்பதால் உடலின் சாதாரண செயல்பாடுகள் கூட பாதிக்கின்றன. இது போதைப்பொருளைப் போல சிலருக்கு அடிக்ஷனை ஏற்படுத்துகிறது. அதை எடுத்து கொள்ளாவிட்டால், அவை வித்ட்ராயல் எனும் அறிகுறிகளை ஏற்படுத்துகிறது. இதனால் அந்த நபர் அமைதியின்மையால் அவதிக்குள்ளாகிவிடுகிறார்.
இதையும் படிங்க: ஒருவர் மீது பாலியல் ஈர்ப்பு வர இப்படி கூட காரணம் இருக்குமா?