குளிர்காலம் வந்தாச்சு. வானிலை குளிர்ச்சியாக இருப்பதால் தாகம் எடுக்காது. இதனால் சிலர் குறைந்த அளவு மட்டுமே தண்ணீர் குடிப்பார்கள். இன்னும் சிலரோ தாகம் எடுக்கவில்லையே பிறகு ஏன் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று அப்படியே இருந்து விடுவார்கள்.
ஆனால், குளிர்காலத்தில் கண்டிப்பாக ஒரு நாளைக்கு குறைந்தது 3-4 லிட்டர் தண்ணீராவது கண்டிப்பாக குடிக்க வேண்டும். அதைவிட குறைவாக குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும். அதாவது சிறுநீரகம், இதயம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த பதிவில் குளிர்காலத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் விளைவுகள் குறித்து தெரிந்துகொள்ளலாம்.