ஒருவருடைய அடிப்படையான உடல் மற்றும் ஆரோக்கிய பிரச்சனைகளை கண்டறிய முதல் அறிகுறியை உணவு நேர வழக்கங்கள் தான். இதில் மாற்றங்கள் ஏற்படும் போது உடலில் பெரிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. இந்த ஆய்வில் காலையில் தாமதமாக உணவு எடுத்துக் கொள்பவர்கள் குறித்து ஆராயப்பட்டது. அதில் தாமதமான காலை உணவு எடுப்பது தொடர்ச்சியாக மனச்சோர்வு, மன அழுத்தம் வாய்வழி சுகாதார பிரச்சனைகள், மோசமான உறக்கம் போன்றவற்றை ஏற்படுத்துவதாக தெரிய வந்தது. தாமதமான உணவை சாப்பிடுவது என்பது இரவு ஆந்தைகளின் குணமாகும்.