உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் இணைந்து கடுமையான நாற்றத்தை உண்டாக்குகிறது. வியர்வைக்கும், துர்நாற்றத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லையென்றாலும் அவை பாக்டீரியாவுடன் கலந்து துர்நாற்றத்தை உருவாக்குகிறது.
இவற்றை போக்க உடலுக்கு நறுமணம் கொடுக்கும் வாசனை திரவியங்கள், பூச்சுகள் பயன்படுத்துவது எல்லாமே தற்காலிகமானவை ஆகும். கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளில் இருப்பதைப் பயன்படுத்தி இயற்கை முறையில் வாடை போக்குவது நல்லது.
1. வியர்வை நாற்றத்தை போக்க கல் உப்பை பயன்படுத்தலாம். குளிக்கும் தண்ணீரில் கல் உப்பை முழுவதுமாக கரையும் வரை கலக்க வேண்டும். அதன் பிறகு இந்த தண்ணீரில் குளிக்கவும்.
2. வேப்பிலை, புதினா போன்றவை வியர்வை துர்நாற்றத்தை நீக்குவது மட்டுமின்றி, கிருமிகளை அழிக்கவும் பயன்படுத்துகிறது. குளிக்கும் தண்ணீரில் இவற்றை மஞ்சள் தூள் கலந்தும் பயன்படுத்தலாம்.
5. கற்றாழையை எப்போது வேண்டுமானாலும் அக்குளில் தடவி கொள்ளலாம். இது நாள் முழுவதும் வியர்வை வாடையிலிருந்து உங்களைத் தள்ளி வைக்கும்.
6. தக்காளி வியர்வை துர்நாற்றத்தை அகற்ற உதவுகிறது. ஒரு தக்காளியை அரைத்து அதன் சாற்றை எடுத்து, அதில் எலுமிச்சை சாறு கலந்து, குளிக்கும் தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும்.