தவிர்க்க வேண்டியவர்கள்
தண்ணீர் விரதத்தினை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், சர்க்கரை நோய் உள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், கர்ப்பிணி பெண்கள், சமீபத்தில் பிரசவமான பெண்கள் மற்றும் தொடர்ச்சியாக மருந்து, மாத்திரைகளை எடுத்துக் கொள்பவர்கள் மேற்கொள்ளக் கூடாது.
ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் க்ரீன் சிக்கன் டிக்கா! எப்படி செய்வது பார்க்கலாம் வாங்க!
தீமைகள்
தண்ணீர் விரதம் ஒருசிலருக்கு ஒத்துப் போகாது. அப்படிப் பட்டவர்களுக்கு நெஞ்செரிச்சல் ஏற்படும் மற்றும் சிறுநீரக செயல்பாட்டினை மோசமாக்கி விடும்.
யூரிக் அமில உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது.
உடல்நிலை சரியில்லாமல் போக வாய்ப்புண்டு.
பசி மனநிலையின் ஏற்ற இறக்கங்களைத் தூண்டி விடும்.
தண்ணீர் விரதத்தினை வெகுநாட்களுக்கு மேற்கொண்டால் மூளை மூடுபனி ஏற்படக் கூடும்.
குறிப்பு:- தண்ணீர் விரதம் மேற்கொள்வதற்கு முன்பாக, மருத்துவரை அணுகி கலந்தாலோசித்து, அவருடைய அனுமதியைக் கேட்ட பின் மேற்கொள்வது நல்லது.