இதயத்தை காக்கும் நடைபயிற்சி;
தினமும் நடைபயிற்சி செய்தால் உங்களுடைய இதய ஆரோக்கியம் மேம்படுகிறது. இதயம் தொடர்பான நோய்களை தடுப்பதில் நடைபயிற்சி பெரும் பங்காற்றுகிறது. பக்கவாதம் ஏற்படாமல் தடுக்கிறது. சர்க்கரை வியாதி, உயர் ரத்த அழுத்தம் போன்ற நாள்பட்ட நோய்களின் ஆபத்தையும் நடைபயிற்சி குறைப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். தினமும் காலையில் நடைபயிற்சி செய்வதால் உங்களுடைய ஆற்றல் மட்டங்கள் அதிகரித்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக காணப்படுவீர்கள். மனநிலையை சீராக்கி மன அழுத்தத்தை குறைக்கிறது. தினமும் நடைபயிற்சி செய்வது எலும்புகளை உறுதியாக்கவும், தசைகளை வலுப்படுத்தும் உதவுகிறது.