நெல்லிக்காய் பாரம்பரியமாக நம் நாட்டில் பல நோய்களைக் குணப்படுத்தும் மருந்துப் பலன்களை தரும் காய்கறியாக உள்ளது. நெல்லிக்காயில் வைட்டமின் பி மற்றும் சி இரும்புச்சத்து, கால்சியம் ஆண்டிஆக்சிடண்டுகள் அடங்கியுள்ளன. தோல் மற்றும் முடியின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நார்ச்சத்து அதிகம் உள்ளதால், நெல்லிக்காய் செரிமானத்தை மேம்படுத்தவும், வயிற்றுக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
தினமும் காலையில் நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நெல்லிக்காயில் உள்ள இரும்புச்சத்து ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன்மூலம் ரத்தச் சோகை பிரச்னகள் எதுவும் வராது.