கன்னித்தன்மையை இழந்த பெண்களுக்கும் முதலிரவில் ரத்தம் வரும்! இந்த மாத்திரையை பத்தி தெரியுமா?

First Published Jan 7, 2023, 1:51 PM IST

Fake Blood Capsule: நிறைய ஆண்கள் தங்கள் மனைவி கன்னித்தன்மையுடன் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்கள். அதாவது தான், திருமணம் செய்து கொள்ளும் பெண்ணின் அந்தரங்க வாழ்வில் முதன்மையான இடம் தனக்கு வேண்டும் என விரும்புகிறார்கள். 

தங்களுடைய வாழ்க்கைத் துணைக்கு வேறொரு காதல், தனக்கு முன்பு ஏதேனும் உடலுறவு ( Pre marital sex) இருந்திருப்பதையும் அவர்களால் ஏற்று கொள்ள முடிவதில்லை. முதலிரவில் தங்களுடைய மனைவிக்கு அந்தரங்க உறுப்பில் இருந்து இரத்தம் வராவிட்டால் அவர் கன்னித்தன்மை இல்லாதவர் என சில ஆண்கள் நினைத்து கொள்கின்றனர். 

 

கன்னித்தன்மை என்பது முதல் தடவை உறவு வைத்து கொள்ளும்போது பெண்ணுறுப்பில் இருந்து ரத்தம் வருவது என பலர் கருதுவதால் வரும் சிக்கல் இது. மருத்துவரீதியாக இந்த விஷயத்தை அணுகும்போது, எல்லா பெண்களுக்கும் இவ்வாறு நடப்பது இல்லை என தெரிய வருகிறது. விளையாட்டு வீராங்கனைகள், ஜிம்னாஸ்டிக்ஸ் செய்பவர்கள், சைக்கிள் ஓட்டும் பெண்கள், அதிக உடல் உழைப்பு கொண்டவர்களுக்கு பெண்ணுறுப்பில் மாற்றம் ஏற்படக்கூடும். இது போன்ற பாலியல் அல்லாத நிகழ்வுகளால் கூட பெண்களுக்கு முதல் உறவு வைத்து கொள்ளும் போது ரத்தம் வருவதில்லை என்கிறது மருத்துவம்.

கன்னித்தன்மை இங்கு பொதுவாக வைக்கப்படவில்லை. பெண்களுக்கு மட்டும்தான் இந்த ஒழுக்கரீதியான வட்டம் வரையப்படுகிறது. இந்த ஒழுக்கரீதியான கோட்பாடுகள், ஆண்களின் ஈகோ பிரச்சனையால் பல உறவுகளில் பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த சம்பவங்களுக்கு போலியான கன்னித்தன்மையை வரவழைக்கும் மாத்திரையை சிலர் தீர்வாக கருதுகின்றனர். உடலுறவின் போது இந்த மாத்திரையை பெண்ணுறுப்பில் வைக்கும்போது அது வெடித்து போலி ரத்தத்தை வெளியேற்றும். இது அந்த பெண் கன்னித்தன்மையுடன் இருக்கிறார் என்ற போலியான பிம்பத்தை அளிக்கும். 

இதையும் படிங்க; எப்பவும் சோர்வா இருக்கா? புரதச்சத்து குறைபாடா இருக்கலாம்.. இந்த உணவுகளை சாப்பிடுங்க தெம்பா ஆகிடுவிங்க!

ஒரு பெண்ணின் ஒழுக்கம் என்பது அவரது பெண்ணுறுப்பில் இல்லை. அந்த கன்னித்தன்மையை வைத்து எந்த பலனும் இல்லையென்றாலும் பிற்போக்கான சிந்தனையுடைய சிலரின் எதிர்பார்ப்புகளை நிவர்த்தி செய்ய இந்த மாத்திரை நிவாரணமாக இருக்கும். ஏற்கனவே கன்னித்தன்மையை இழந்தவர்களுக்கும் கூட இந்த மாத்திரை வரப்பிரசாதம் தான் என்கிறார்கள் சில இணையவாசிகள். இந்த மாத்திரை இணையதளங்களில் விற்பனைக்கு கிடைக்கிறது. சுமார் 2,700 முதல் 3,600 ரூபாய் வரை இதனை பெறலாம். முதல் இரவுக்கான போலி ரத்தம் வெளியேற உயர்தரத்திலுள்ள ரத்தப் பொடி கலக்கப்பட்டுள்ளது. பயன்படுத்த எளிமையானது. பக்கவிளைவுகள் இல்லையெனவும் கூறப்படுகிறது. 

சிலர் இந்த மாத்திரை பெண்களின் ஒழுக்கத்தை நிறுவ கோட்பாடுகள் வரையறை செய்யும் ஆணாதிக்கத்திற்கு சவுக்கடி என்கின்றனர். ஆனால் இந்த மாத்திரைகளை பயன்படுத்துவது மீண்டும் அந்த ஆணாக்கத்திற்கு துணை போகும் செயல்தான். ஒரு ஆணின் ஈகோ கஷ்டபடாமல் பார்த்து கொள்ள தான் இந்த வழிமுறை. கன்னித்தன்மையை எந்த ஆணும் நிரூபணம் செய்யாத போது பெண் ஏன் நிரூபிக்க வேண்டும். 

எந்த உறவும் ஒரே நாளில் கட்டியெழுப்ப கூடியது அல்ல. சில உறவுகள் தோற்ற பிறகு தான் ஒரு நல்ல உறவை கண்டடைய முடிகிறது. உங்களுக்கு முன்பாக உங்கள் வாழ்க்கைத் துணைக்கு இன்னொரு காதல் இருந்தால் அதை குற்றப்படுத்த வேண்டிய தேவையில்லை. உங்களுக்கு அவர் நேர்மையானவராக இருக்கிறாரா என்பதே முக்கியம். மாத்திரையால் அல்ல மனங்களால் இணையுங்கள். போலியான பிம்பங்களால் உறவை ஆரம்பிக்காதீர்கள். 

இதையும்; இறுக்கமான உள்ளாடை அணியும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை உண்டாகுமா? விந்தணு பாதிப்பு அபாயம்!

click me!