உணவு மற்றும் தண்ணீரைப் போலவே தூக்கமும் மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது. இரவு முழுவதும் நன்றாக தூங்குவதன் மூலம், அடுத்தநாள் முழுவதும் நம் உடலுக்கு சுறுசுறுப்பு மற்றும் புத்துணர்ச்சி கிடைக்கிறது. மேலும் இதய நோய் ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது. ஒருவேளை உங்களுக்கு போதுமான தூக்கமில்லாமல் போனால், உயர் இரத்த அழுத்தம், டைப் 2 நீரிழிவு பிரச்னை, மாரடைப்பு, பக்கவாதம், வலிப்பு போன்ற கடுமையான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும். அதனால் உறங்கச் செல்வதற்கு முன்பு இரவில் குறிப்பிட்ட செயல்பாடுகளை தவிர்ப்பதன் மூலம், எந்தவித பிரச்னையும் ஏற்படாமல் வாழலாம்.