இந்தியாவில் நீரிழிவு நோய் மிகவும் பொதுவான பிரச்னையாக உள்ளது. பலரும் இந்நோயுடன் போராடுவது மட்டுமில்லாமல், ஒருவருடைய உடலில் ஏற்படக்கூடிய பல பக்க விளைவுகளையும் சமாளிக்க வேண்டியுள்ளது. அதில் முக்கியமான பிரச்னை பார்வை திறனில் குறைபாடு ஏற்படுவது. நீரிழிவு பிரச்னையால் பார்வை திறன் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இந்த பிரச்னைக்காக பல ஆண்டுகள் அவர் மருந்து எடுத்து வருவதன் காரணமாக, அது அவர்களுடைய கண்கள், சிறுநீரகங்கள் மற்றும் பிற உறுப்புகளில் நரம்புகளை பாதிக்க அதிக வாய்ப்புள்ளது. நீரிழிவு என்பது ஒரு சிக்கலான வளர்சிதை மாற்ற நோயாகும், இதனால் விழித்திரை, கண்ணாடி, லென்ஸ் மற்றும் பார்வை நரம்பு உட்பட கண் சார்ந்த உறுப்புகள் பாதிக்கப்படுகிறது.