டிவி விளம்பரங்களில் தான் பெரும்பாலானோர் அஸ்வகந்தா மூலிகையின் பெயரை கேட்டிருப்பார்கள். இந்திய ஆயுர்வேதத்தில் பயன்படுத்தப்படும் பழமையான மூலிகை இது. அஸ்வகந்தாவின் வேர், பழங்கள் மருத்துவத்தில் உபயோகம் செய்யப்படுகிறது. 'அஸ்வகந்தா' எனும் வார்த்தை சமஸ்கிருதத்திலிருந்து வந்தது. இதற்கு "குதிரை & வாசனை" என்பது பொருள். என்பதாகும். இது அந்த மூலிகையின் நறுமணம், செயல்படும் ஆற்றலை குறிப்பதாக கூறப்படுகிறது. அஸ்வகந்தா மூலிகை நம்முடைய பல நோய்களை குணப்படுத்துவதோடு, மன நலனையும் மேம்படுத்துகிறது.