காய்கறிகளை கழுவுவதை விட அசைவ உணவுகளை கழுவும் முன்பு நாம் அதிக மெனக்கெடுவோம். இறைச்சியில் இருக்கும் ரத்தம், கிருமி உள்ளிட்ட பல காரணங்களுக்காக இதை செய்கிறோம். ஆனால் கோழிக்கறியை சமைக்கும் அறையில் வைத்தே கழுவக் கூடாதாம். அப்படி கழுவினால் பாக்டீரியா சமையலறையில் உள்ள மற்ற பொருள்களின் மீது தண்ணீர் மூலம் பரவ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.