அதிகமாக எலுமிச்சை தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் என்ன நடக்கும்? நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..

First Published Jan 9, 2024, 3:11 PM IST

அதிக அளவு எலுமிச்சை நீரை உட்கொண்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர் நிகில் வாட்ஸ் எச்சரித்துள்ளார். 

எலுமிச்சை சாறு அல்லது எலுமிச்சை நீர் என்பது பரவான ஆரோக்கிய நன்மைகளுக்காக பயன்படுத்தப்படுகிக்றது. குறிப்பாக நச்சு நீக்கும் பண்புகளுக்காகவும், செரிமான ஆரோக்கியம் மற்றும் வளர்சிதை மாற்றத்தில் நேர்மறையான தாக்கத்திற்காகவும் பலரும் எலுமிச்சை நீரை அருந்துகின்றனர். ஆனால் அதிக அளவு எலுமிச்சை நீரை உட்கொண்டால் அது பாதக விளைவுகளை ஏற்படுத்தும் என்று சுகாதார நிபுணர் நிகில் வாட்ஸ் எச்சரித்துள்ளார். 

அதிகளவிலான எலுமிச்சை நீரால் முக்கிய உறுப்புகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளார். எலுமிச்சை நீர் உட்கொள்வதால் உடலில் அதிகரித்த வைட்டமின் சி அளவுகளின் தாக்கம் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

வைட்டமின் சி இன்றியமையாததாக இருந்தாலும், அதிகப்படியான அளவு இரத்தத்தில் இரும்பு அளவை உயர்த்தி, முக்கியமான உறுப்புகளை பாதிக்கும். உடலில் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்க வைட்டமின் சி மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது என்றும் அவர் அறிவுறுத்தி உள்ளார். 

எலுமிச்சை நீரை அதிகமாக உட்கொள்வது வயிற்று வலிக்கு வழிவகுக்கும் நிகில் வாட்ஸ் தெரிவித்துள்ளா. அதிக அளவு வைட்டமின் சி வயிற்றில் அதிகப்படியான அமிலச் சுரப்பைத் தூண்டி, அமிலத்தன்மை அதிகரிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது, இந்த அதிகரித்த அமிலத்தன்மை வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் பிற அசௌகரியங்கள் போன்ற இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் போன்ற நிலைமைகளைக் கொண்ட நபர்கள் எச்சரிக்கையுடன் செயல்படவும், எலுமிச்சை தண்ணீரை உட்கொள்வதைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும், அதிகப்படியான எலுமிச்சை நீரை உட்கொள்பவர்களுக்கு வாய் புண்களை உருவாக்கும் அபாயம் இருப்பாதாவும் அவர்  சுட்டிக்காட்டுகிறார். வாய் துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்கும் பற்களைச் சுத்தப்படுத்துவதற்கும் இதைப் பயன்படுத்தினாலும், அதிகப்படியான நுகர்வு வாய் வீக்கத்திற்கு வழிவகுக்கும் என்றும், புண்கள், கொப்புளங்கள் மற்றும் எரிச்சலை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் எலுமிச்சை இது வாய்வழி ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் தொண்டை புண்களுக்கு பங்களிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

எலுமிச்சை நீரின் அமிலத்தன்மை, பற்களை வலுவிழக்கச் செய்து, பல் அரிப்பை ஏற்படுத்துவது பற்றிய கவலைகளை எழுப்புகிறது. இந்த அபாயங்களைக் குறைக்க ஸ்ட்ராக்களை பயன்படுத்த அவர் பரிந்துரைத்துள்ளார். எலுமிச்சை நீரின் அமிலத்தன்மை, எலும்பு பலவீனம், நீரிழப்பு மற்றும் பொட்டாசியம் குறைபாடு பற்றிய கவலைகளையும் எழுப்புகிறது என்று அவர் கூறியுள்ளார்.

நீங்கள் தினசரி மருந்து உட்கொள்பவராக இருந்தால், எலுமிச்சை நீர் மருந்துகளில் தலையிடலாம், அவற்றின் செயல்திறனைக் குறைக்கலாம் அல்லது நேர்மாறாகவும் இருக்கலாம் என்பதை சுட்டிக்காட்டி உள்ளார். எனவே மருந்து உட்கொள்ளும் நபர்கள் எலுமிச்சை தண்ணீருடன் சாத்தியமான தொடர்புகளைப் பற்றி சுகாதார நிபுணர்களுடன் கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எலுமிச்சை நீர் பல்வேறு ஆரோக்கிய நலன்களை வழங்கினாலும், அதை மிதமான அளவில் உட்கொள்வது முக்கியமானது. உறுப்புகள், வாய்வழி ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு ஏற்படக்கூடிய அபாயங்களைத் தவிர்ப்பதற்காக, எலுமிச்சை நீரை உட்கொள்ளும் நபர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார். எந்தவொரு உணவுப் பழக்கத்தையும் போலவே, எலுமிச்சை நீரை உட்கொள்ளும் முன்பும் சுகாதார நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பேணுவதற்கான சமநிலையான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட அணுகுமுறையை உறுதி செய்கிறது.

click me!