பொதுவாக இறைச்சியை சமைக்கும்போது அதிகமாக சுத்தம் குறித்த அக்கறை இருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுவர். ஏனென்றால் அவற்றில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள் காணப்படும். அதிலும் வீட்டுக்குள் இறைச்சியை கழுவினால் கூடுதல் கவனம் வைக்க வேண்டும். இறைச்சியை பச்சையாக சாப்பிட்டால் அதிலுள்ள கிருமிகள் நம் உடலுக்குள் அசாத்திய மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், வியட்நாம் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை ரத்தத்தை புட்டிங் போல செய்து சாப்பிட்டதால் விபரீதம் நடந்துள்ளது.