உகாதி பச்சடி இல்லாமல் உகாதி பண்டிகை இருக்காது. இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, துவர்ப்பு மற்றும் கசப்பு என அறுசுவைகளை சேர்த்து இந்த பச்சடி செய்யப்படுகிறது. யுகாதி பூஜையின் போது மக்கள் இந்த சிறப்பு பச்சடியை நைவேத்யமாக படைக்கப்படுகிறது.
உகாதி பச்சடி
உகாதி பச்சடி கொண்டாட்டத்திற்காக தயாரிக்கப்படும் பாரம்பரிய உணவுகளில் ஒன்றாகும். புளி, மாங்காய் வேப்பம்பூ, வெல்லம், உப்பு மற்றும் சிவப்பு மிளகாய் தூள் அல்லது கருப்பு மிளகு தூள் ஆகியவற்றைக் கொண்டு இந்த உணவு தயாரிக்கப்படுகிறது. முதலில் வெல்லத்தை அரை கப் தண்ணீரில் கரைத்து வைக்க வேண்டும். பின்னர் புளியை கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதில் நறுக்கி வைத்த மாங்காய், வேப்பம்பூ, உப்பு, மிளகாய் தூள் சேர்த்து கலந்தா உகாதி பச்சடி ரெடி.