படி 1: முதலில் கத்தரிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி கத்தரிக்காய் துண்டுகளை நன்றாக வதக்கி தனியாக எடுத்து வைக்கவும்.
படி 2: அதே கடாயில் எண்ணெய் ஊற்றி கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை வதக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, புளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
படி 3: வதக்கிய பொருட்கள் ஆறியதும், கத்தரிக்காய் மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி சற்று கொரகொரப்பாக அரைக்கவும்.