வெள்ளரிக்காய் கோடைக்கு ஏற்ற கொடை என்று சொல்லலாம். இதை உண்ணும்போது பற்கள் சுத்தமாகும். வெள்ளரி தண்ணீரைப் போலவே, எலுமிச்சை, புதினா ஆகியவை கலந்த பானங்கள் கூட நம்முடைய காலையைத் தொடங்க சிறந்த வழியாகும். எலுமிச்சை, புதினா ஆகிய இரண்டும் அவற்றின் புத்துணர்ச்சியூட்டும் தன்மைக்காக உண்ணப்படுகின்றன. இவற்றை நீரில் போட்டு, அந்த நீரை எடுத்து கொள்வதால் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.