அடுப்பில் ஒரு தவா வைத்து அதில் கடலை மாவு சேர்த்து டிரை ரோஸ்ட் செய்து கொள்ள வேண்டும். இந்த மாவினை ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் கடலை மாவினில் இஞ்சி பூண்டு பேஸ்ட், மஞ்சள் தூள்,தனியா தூள், மிளகாய் தூள், சீரகத் தூள், கரம் மசாலா மற்றும் உப்பு, கடலை மாவு மற்றும் லெமன் ஜூஸ் ஆகியவை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது கலவையில் கெட்டி தயிர் கொஞ்சம் சேர்த்து நன்றாக பீட் செய்து கொள்ள வேண்டும்.
இப்போது இந்த மாவு கலவையில் காலிஃபிளவர் சேர்த்து நன்றாக பிரட்டிக் கொள்ள வேண்டும். பின் காலிஃபிளவரை சுமார் ஒரு மணி நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர வைக்க வேண்டும்.
அடுப்பில் ஒரு தவா வைத்து அதில் இந்த காலிஃபிளவரை சில துளி எண்ணெய் விட்டு பிரட்டி விட்டு பின் அதனை வெறும் தீயில் சுட்டு எடுத்தால் காலிஃபிளவர் தந்தூரி ரெடி!