மல்லித்தழை - கையளவு
உப்பு- தேவையான அளவு
எண்ணெய்-தேவையான அளவு
என்ன! பூசணிக்காயில் கட்லெட்டா! பார்க்கலாம் வாங்க!
செய்முறை :
முதலில் சிக்கன் கீமாவை சுத்தம் செய்து அலசி வைத்துக் கொள்ள வேண்டும். கொள்ளவும். தக்காளி,வெங்காயம், மல்லித்தழை மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு கடாய் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின், கிராம், பட்டை, ஏலக்காய்ஆகியவை சேர்த்து தாளிக்க வேண்டும். அடுத்தாக அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதம் வரும் வரை வதக்கி விட வேண்டும்.
வெங்காயம் நன்கு வதங்கிய பின் அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து அதன் பச்சை வாசனை செல்லும் வரை வதக்கி விட வேண்டும். பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து அது நன்கு மசியும் வரை வதக்கி விட வேண்டும்.