இன்னும் அடுத்த சில வாரங்களில் பள்ளி படிக்கும் குழந்தைகளுக்கு முழு ஆண்டுத் தேர்வு முடிந்து விடுமுறை அளிக்கப் பட உள்ளது. இப்படி வீட்டில் இருக்கப்போகும் உங்கள் வீட்டு குட்டிஸ்களுக்கு அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளை செய்து கொடுத்தால், விடுமுறையை இனிதே கழிப்பார்கள். வழக்கமாக செய்கின்ற உணவு வகைகளையே கொஞ்சம் புதுமையாக ஏதேனும் செய்து கொடுத்தால் மிகவும் ருசித்து ரசித்து சாப்பிடுவார்கள்.
அப்படி டிஃபரென்ட்டான ஒரு ரெசிபியை தான் காண உள்ளோம். அது என்னவாக இருக்கும் என்று யோசிக்கிறீர்களா? கட்லெட் தான் இன்று நாம் பார்க்க உள்ள ரெசிபி! அட கட்லெட்டில் என்ன புதுமை, வித்தியாசம் இருக்கப்போகிறது என்று நீங்கள் நினைக்கிறீர்கள். வழக்கமாக கட்லெட்டை நீங்கள் உருளைக்கிழங்கு,பட்டாணி,வெங்காயம் ,பன்னீர் போன்றவற்றை வைத்து தான் செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். பூசணிக்காய் வைத்து கட்லெட் செய்திருக்க மாட்டீர்கள் .