கோடைகாலத்தில் உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள இளநீர், மோர், பழச்சாறு போன்றவை எடுத்து கொள்ளுங்கள். இதனால் வயிறு குளிர்ந்துபோகும். செரிமான செயல்முறையை எளிதாக்கும். கோடையில் புதினாவை கண்டிப்பாக சாப்பிடவேண்டும். புதினா வயிற்றை குளிர்வித்து, அமிலத்தன்மையை குறைக்கும். சாப்பாட்டிற்கு பிறகு புதினா நீர் அருந்துவதால் செரிமானம் மேம்படும். வயிற்றுவலியை குறைப்பது மட்டுமின்றி, வீக்கத்தையும் முற்றிலும் தணிக்கும். புதினா பானத்தை எப்படி தயார் செய்வது என்று இங்கு காணலாம்.