இப்போது அரைத்துள்ள மாவினை ஒரே அளவிலான உருண்டைகளாக பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை இட்லி தட்டில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை (இட்லி பாத்திரத்தில் வைத்து) வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடான பின், அதில் கடுகு, சோம்பு , பூண்டு மற்றும் அரிந்து வைத்துள்ள சின்ன வெங்காயம் ஆகியவை சேர்த்து வதக்கி விட வேண்டும்.பின் அதில் மிளகாய் தூள், மல்லி தூள், மஞ்சள் தூள் ஆகியவை சேர்த்து வதக்கி விட்டு பின் அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து,தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும்.
தக்காளி நன்றாக வதங்கிய பிறகு, புளிக்கரைசல் சேர்த்து அரைத்து வைத்துள்ள மாவினை சிறிது சேர்த்து நன்கு கலந்து கொண்டு அதில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும்.குழம்பு கொதிக்கும் போது தேங்காய் பால் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
பின் குழம்பு சற்று கெட்டியான பிறகு, அதில் வேக வைத்துள்ள உருண்டைகளை சேர்த்து கறிவேப்பிலை சேர்த்து 2 நிமிடங்கள் வைக்க வேண்டும். இறுதியாக அடுப்பில் இருந்து கடாயை இறக்கி பொடியாக அரிந்து வைத்துள்ள மல்லித்தழையை தூவினால் தூவினால் சூப்பரான செட்டிநாடு பருப்பு உருண்டை குழம்பு ரெடி!