பின் கடாயை இறக்கி விட்டு கலவை நன்கு ஆறிய பிறகு, மிக்சி ஜாரில் சேர்த்து அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு வாணலி வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பின் , கடுகு, கீறி வைத்துள்ள பச்சை மிளகாய் ஆகியவை சேர்த்து தாளித்து, பின் பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
இப்போது வாணலியில் அரிந்து வைத்துள்ள கத்திரிக்காய் சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு சிறிது தண்ணீர் ஊற்றி கத்தரிக்காயை வேக வைக்க வேண்டும். கத்திரிக்காய் வெந்த பின்,அரைத்து வைத்துள்ள மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்க வேண்டும்.
இப்போது பின் புளிக்கரைசல் ஊற்றி கொதிக்க வைத்து பின் அதில் சுத்தம் செய்து வைத்துள்ள கருவாட்டை சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து இறக்கினால், கமகமக்கும் கருவாட்டு கத்திரிக்காய் குழம்பு ரெடி!