
இதையும் படிங்க : Gas Cylinder : கேஸ் சிலிண்டர் தீரப்போகிறதா? இந்த அறிகுறிகளை வைத்து முன்கூட்டியே கண்டுபிடிக்கலாம்!
ஆட்டுக்கால் வாங்கும்போதே அதில் உள்ள முடிகளை தீயில் காட்டி சுத்தம் செய்திருந்தாலும், வீட்டிற்கு வந்ததும் மஞ்சள் தூள் மற்றும் கல் உப்பு சேர்த்து கைபொசுங்கும் சூடான நீரில் இரண்டு மூன்று முறை நன்றாக அலசி எடுக்க வேண்டும். அப்போதுதான் அதில் உள்ள கவுச்சி வாடை முழுமையாக நீங்கும்.
பாய் வீட்டு ஸ்டைல் பாயாவின் மிக முக்கிய ரகசியம் அதன் சாறிடைப் பக்குவம். ஒரு குக்கரில் சுத்தம் செய்த ஆட்டுக்காலை சேர்த்து, அதனுடன் ஒரு வெங்காயம், ஒரு தக்காளி, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், சிறிதளவு புதினா-கொத்தமல்லி மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடுங்கள்.
சமையல் நுணுக்கம்: ஆட்டுக்கால் முழுமையாக வெந்து, அதன் சத்துகள் அனைத்தும் குழம்பில் இறங்க வேண்டும். குறைந்தபட்சம் 10 முதல் 12 விசில் வரை விட்டு, பின்னர் மிதமான தீயில் 15 நிமிடங்கள் குக்கரை வைத்து எடுத்தால் தான் ஆட்டுக்கால் வெந்து, ஜெல்லி போன்ற பதத்திற்கு வரும்.
இதற்கிடையில் மிக்ஸி ஜாரில் கால் மூடி தேங்காய், 15 முந்திரி பருப்பு, 1 ஸ்பூன் சோம்பு, பச்சை மிளகாய் மற்றும் ஊறவைத்த கசகசா சேர்த்து தண்ணீர் விட்டு விழுதுபோல் நைசாக அரைத்துக்கொள்ளவும். (முந்திரியும் கசகசாவும் தான் பாயாவிற்கு அந்த ஹோட்டல் ஸ்டைல் திக்கான கிரீமி தன்மையைத் தரும்).
இதையும் படிங்க : Cashew Prices : ஒரு கிலோ முந்திரி வெறும் ₹300-400-க்கு வேணுமா? இந்த இடத்துக்கு போனா வாங்கலாம்!
தக்காளி வதங்கியதும் மிளகாய் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து அடிபிடிக்காமல் குறைந்த தீயில் சில நொடிகள் வதக்கவும்.
இப்போது நாம் ஏற்கனவே வேகவைத்துள்ள ஆட்டுக்காலை அதன் தண்ணீரோடு சேர்த்து மசாலாவில் கிளறவும். அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள தேங்காய்-முந்திரி விழுதைச் சேர்த்து, பாயாவிற்குத் தேவையான கூடுதல் தண்ணீர் மற்றும் உப்பு சேர்க்கவும்.
இதையும் படிங்க : Mutton vs Chicken Liver : மட்டன் ஈரலா? சிக்கன் ஈரலா? உடலுக்கு அதிக சத்து தருவது எது?
நீங்கள் தேங்காய் விழுதுக்கு பதிலாக கடைசியாக கெட்டியான தேங்காய் பாலை ஊற்றுவதாக இருந்தால், மசாலாவோடு கால் வெந்த ஆட்டுக்காலைச் சேர்த்து 2 விசில் விட்டு இறக்கிய பின், அடுப்பை அணைத்துவிட்டு தேங்காய் பாலை ஊற்றி ஒரு கொதி மட்டும் விட்டு இறக்க வேண்டும். கொதிக்க வைத்தால் தேங்காய் பால் திரிந்துவிடும் என்பதில் கவனம் தேவை.
இப்போது மேலே பொடியாக நறுக்கிய மல்லித் தழைகளைத் தூவி இறக்கினால்... வீடே மணக்கும் அசல் பாய் வீட்டு ஸ்டைல் ஆட்டுக்கால் பாயா தயார்!
சுடச்சுட இட்லி, ஆவியில் வெந்த இடியாப்பம் அல்லது தோசையுடன் இந்த ஆட்டுக்கால் பாயாவை தொட்டு சாப்பிட்டால், சுவை நாவில் தங்கிவிடும். இன்றே உங்கள் வீட்டில் இதை ட்ரை பண்ணிவிட்டு, குடும்பத்தினரின் பாராட்டு மழையில் நனையுங்கள்!
இதையும் படிங்க : Copper Bottle : காப்பர் பாட்டிலில் தினமும் தண்ணீர் குடிப்பது உண்மையில் நல்லதா? யாரெல்லாம் இதைத் தவிர்க்க வேண்டும்?