தாய்மை அழகான உணர்வு. ஒரு பெண் தாயாகும் போது எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துவிடுவாள். ஆனால் இதனிடையே அவளுக்கு கர்ப்ப காலம் முதல் பிரசவம் வரையும் பல்வேறு வகையான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்ப காலம் பிரசவம், அதன் பின்னரும் வெவ்வேறு அனுபவங்கள் கிடைக்கும். அதனால் புதிய தாய்மார்கள் யாருடைய அறிவுரையையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது.