பின் அதே கடாயில் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து வதக்கி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைத்து கலவையை மிக்சி ஜாரில் சேர்த்து அதோடு வதக்கிய கீரை,வெல்லம் , புளி மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து அரைத்து ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு சின்ன பான் வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் கடுகு, 1 வர மிளகாய் , கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அதனை சட்னியில் சேர்த்தால் சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி!
இந்த சட்னியை இட்லி,தோசைக்கு, சப்பாத்தி போன்றவைக்கு தொட்டுக்க கொண்டு சாப்பிடலாம். மேலும் வெரைட்டி ரைஸ்க்கும் தொட்டு வைத்து சாப்பிடலாம்.