சாப்பிட்ட பிறகு நடக்கும்போது, வயிற்றில் இருக்கும் உணவு விரைவாக நகரத் தொடங்குகிறது. இதனால் செரிமான செயல்முறை இன்னும் திறமையாக நடைபெறுகிறது. இந்த நடைப்பயிற்சி குடல் இயக்கத்தைத் தூண்டி, வயிறு உப்பசம், நெஞ்செரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளைக் குறைக்கிறது. உடலுக்கு எவ்வித அழுத்தமும் கொடுக்காமல், செரிமான மண்டலம் தனது வேலையைச் சரியாகச் செய்ய இந்தச் சிறிய நடைப்பயிற்சி பெரிதும் உதவுகிறது.
இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு
இரண்டாவது முக்கியமான காரணம், இரத்த சர்க்கரையின் அளவை இது சீராக வைக்கிறது. சாப்பிட்ட பிறகு சும்மா அமர்ந்திருப்பதை விட, வெறும் 10 நிமிடங்கள் நடந்தால் கூட, இரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிப்பதைக் (குறைக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரவு உணவிற்குப் பின் எந்தவொரு உடற்பயிற்சியும் செய்யாமல் அப்படியே படுத்துவிட்டால், உடல் பருமன் அதிகரிப்பதுடன் உடலில் குளுக்கோஸ் அளவும் கூடிவிடும்.