பெண்கள் எப்போதுமே தங்களது முகம் பொலிவாகவும், பளபளப்பாகவும் அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார்கள். இதற்காக அவர்கள் பல்வேறு முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள். பார்லருக்கு செல்வோர் ஒருபுறம் இருந்தாலும், சில பெண்கள் வீட்டில் கிடைக்கும் கடலை மாவு, மஞ்சள், அரிசி மாவு, கற்றாழை போன்ற பொருட்களை வைத்து தங்களது முகத்தை அழகுப்படுத்தி கொள்கிறார்கள். அந்த வரிசையில் பாலும் உண்டு.
பாலில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், சருமத்தில் உள்ள இறந்த செல்களை புதுப்பிக்கவும் மற்றும் சருமத்தை நீரேற்றத்துடன் வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே, பாலை தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் சருமம் எப்போதுமே பொலிவாகவும், பளபளப்பாகவும் இருக்குமாம். இத்தகைய சூழ்நிலையில், கொரியன் பெண்களைப் போல உங்களது முகம் பளபளக்க பாலை எப்படியெல்லாம் ஃபேஸ் பேக்காக பயன்படுத்தலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.