வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !

Published : Mar 12, 2023, 09:38 PM ISTUpdated : Mar 12, 2023, 09:39 PM IST

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதத்தில் நமது ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளே தருகிறது. அந்த வகையில் மாதுளை பழம் என்னென்ன நன்மைகளை குறிப்பாக உடல் தோற்றத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

PREV
13
வயசானாலும் பார்க்க என்றும் வசீகரமான, இளமையான தோற்றத்தில் இருக்க ஆசையா ? அப்போ இது ஒன்று போதுமே !

வயது ஏற ஏற நமது உடம்பில் பல மாற்றங்கள் ஏற்படும். சில மாற்றங்கள் நமது உடம்பின் உள்ளே ஏற்படும். சில மாற்றங்கள் நமது உடம்பின் வெளிப்பகுதியில் ஏற்படும். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் நமது தோல்கள் சுருங்கத் தொடங்கி உடல் பொலிவில்லாமல் காணப்படும் .

ஆனால் வயதானாலும் என்றும் இளமையான தோற்றத்தில் இருக்க நாம் தினமும் மாதுளம்பழத்தை சேர்த்தாலே போதுமமென்று சில ஆய்வு முடிவுகள் தெரிவித்துள்ளன.

மாதுளை பழத்தில் யுரோலித்தின் ஏ என்ற வேதிப் பொருள், நம் உடலின் செல் சுத்திகரிப்பு மையத்தினை புத்துணர்வு அடையச் செய்வதால் நமது உடம்பில் இருக்கும் செல்கள் வயது முதிராமல் தொடர்ந்து, ஒரே ஆற்றலுடன் செயல்பட வைக்கிறது.

ஒவ்வொரு பழமும் ஒவ்வொரு விதத்தில் நமது ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளே தருகிறது. அந்த வகையில் மாதுளை பழம் என்னென்ன நன்மைகளை குறிப்பாக உடல் தோற்றத்திற்கு எந்த வகையில் உதவுகிறது என்று இந்த பதிவில் பார்ப்போம்.

சுருக்கங்கள் மறையும் :

மாதுளைப் பழ விழுதை பட்டருடன் சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து அதனை தோலில் தொய்வுள்ள இடங்களில் அப்பளை செய்து, சுமார் 10 நிமிடங்கள் சென்ற பிறகு குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வர தோல் சுருக்கங்கள் காணாமல் போகும்.

23
pomegranate

சரும நோய்கள் நீங்கும் :
மாதுளை பழச்சாறு எடுத்து அதில் தேன் ,கல்கண்டு, பனீர் ஆகியவற்றை எடுத்து நன்கு மிக்ஸ் செய்து உருட்டுப்பாகு பதத்தில் காய்ச்சி கொள்ள வேண்டும். பின் அதனை நெல்லிக்காய் அளவு எடுத்து,ஒரு நாளுக்கு 2 முறை சாப்பிட்டு வர படை, தேமல் போன்ற தோல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி, சருமத்தை விட்டே போய்விடும்.

அழகை பெருக்கும் :
மாதுளைப்பழம் தோலில் உண்டாகும் பிரச்சினைகளைக மட்டுப்படுத்தி சீரமைப்பதால், வடு உண்டாவதை தடுக்கும். மேலும் முத்து சரும சுருக்கத்தை நீக்கும் தன்மை கொண்டது. தவிர கூந்தலை பளபளவென வைப்பதில் சிறந்தது.

இது தெரிந்தால் இனிமேல் நீங்கள் காலிஃபிளவர் இலைகளை தூக்கி வீச மாட்டீங்க!
பளபளப்பை அதிகரிக்கும்:

1 ஸ்பூன் மாதுளை ஜூஸுடன் 1/2 ஸ்பூன் சந்தனம் இவ்விரண்டையும் குழைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகத்தில் பளபளப்பு அதிகரிக்கும்.

33

பருக்கள் அண்டாது:

மாதுளைக்கு பருவே வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது. மாதுளை ஜூஸ், வெட்டிவேர் பவுடர் இரண்டையும் சமஅளவில் எடுத்து நன்றாக கலந்து முகத்தில் பூசி விட்டு ,நன்கு காய்ந்த பின் முகத்தை கழுவினால் பருக்கள் உங்கள் பக்கமே அண்டாது.

கருப்பைக்கு வலுவூட்டும் :

மாதுளைப்பழச்சாறில் செய்யப்படும் மாதுளை மணப்பாகு பெண்களின் கர்ப்பக்காலத்தில் ஏற்படும் வாந்தி மற்றும் மசக்கையை குணப்படுத்தும் தன்மை பெற்றது. தவிர உடல் சூட்டினைத் தணித்து கருப்பைக்கு வலுவூட்டும் பணியையும் சிறப்பாய் செய்கிறது. அதோடு இரத்தத்தை விருத்தி செய்து கருவை ஆரோக்கியத்துடன் வளர செய்கிறது. முதல் 5 மாதங்கள் வரை இதனை எடுத்துக் கொள்ளலாம்.

click me!

Recommended Stories