இந்த எண்ணெயின் நன்மைகள் :
1. முடி வறட்சியடைவதை தடுக்கும் -
உங்களது கூந்தல் வறண்டு போயிருந்தால் இந்த எண்ணெய் உங்களுக்கு சிறந்த தேர்வாகும். இந்த எண்ணெயை உச்சந்தலையில் தடவினால் உச்சந்தலைக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் .இதனால் உங்களது தலைமுடி மென்மையாகவும், பட்டு போல மாறும். முடியின் வலிமையும் அதிகரிக்கும்.
2. முடி வளர்ச்சியை தூண்டும் -
தேங்காய் எண்ணெய் முடியின் வேர்களை வலுப்படுத்த உதவும். வெந்தயத்தில் இருக்கும் புரதம் மற்றும் நிக்கோர்ட்டினிக் அமிலம் முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். இவை இரண்டும் சேர்ந்து முடி வேகமாகவும், நீளமாகவும் வளர உதவும்.