கண்ணுக்கு கீழுள்ள கருவளையத்தை போக்க...வீட்டிலுள்ள பொருட்களை ட்ரை பண்ணி பாருங்க! சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!

First Published Mar 18, 2023, 4:24 PM IST

கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்

இன்றைய இயந்திர வாழ்க்கையில் பெண்கள், ஆண்கள் என்று அனைவருக்கும் கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பதை நம்மால் காண முடிகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சரியான தூக்கமில்லாமை , தொடர்ந்து கணினி அல்லது மொபைல் பார்த்து வேலை செய்தல், ஊட்டச்சத்து குறைபாடு என்று பல்வேறு காரணங்கள் இருக்கின்றன.

இப்படி சரியான நேரத்தில் தூங்காமல் அல்லது போதுமான அளவில் தூங்காமல் தொடர்ந்து மொபைல் பார்க்கும் பழக்கம் நம் அனைவரிடமும் ஒட்டிக் கொண்டு விட்டது. இப்படி செய்வதால் கருவளையம் பிரச்சனை மட்டுமல்லாமல் கண் சார்ந்த பிரச்சனைகளும் ஏற்படக் வாய்ப்புகள் உள்ளன.

potato

இப்படி கண்ணுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தை வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி எப்படி நீக்குவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

உருளைகிழங்கு :

உருளைக்கிழங்கு சாறை காட்டன் வைத்து டிப் செய்து கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையத்தில் தடவி விட்டு சிறிது நேரம் சென்ற பிறகு குளிர்ந்த நீரில் தண்ணீரில் கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் 2 வாரங்களில் நல்ல மாற்றத்தை காணலாம்.

தக்காளி:

ஒரு சிறிய கிண்ணத்தில் தக்காளி சாறுடன் சில துளி எலுமிச்சை சாறு சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். இதனை உங்கள் கண்களுக்கு கீழிருக்கும் கருவளைய பகுதிகளில் தடவி விட்டு சுமார் 10 நிமிடங்கள் வரை உலர வைத்துபிறகு குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் 2 அல்லது 3 முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். தக்காளியில் இருக்கும் லைக்கோபின் மற்றும விட்டமின் சி போன்றவை தோலினை பாதுகாக்கும்.

 

வெள்ளரிக்காய்:

வெள்ளரியில் அதிக அளவு நீர் சத்துக்கள் இருப்பதால் அவைகளை கண்களுக்கு மேற்புறத்தில் வைப்பதால் கண்களுக்கு குளிர்ச்சியை தந்து பிரெஷ்ஷாக வைக்க செய்யும். மேலும் இது கருவளையத்தையும் நீக்க கூடியது.

இட்லி மாவு இல்லைனா என்னங்க , 1 தடவ இப்படி கோதுமை மாவு வைத்து இட்லி செய்து சாப்பிடுங்க!

ஆரஞ்சு சாறு:

ஆரஞ்சு சாறை ஒரு  கிண்ணத்தில் எடுத்து அதனை ஒரு காட்டன் வைத்து டிப் செய்து கண்களுக்கு கீழ் தடவி சுமார் 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் கழுவினால் கண்கள் பளிச்சிடும்.இதனை தினமும் செய்து வர நல்ல சேன்ஜ் விரைவில் கிடைப்பதை காணலாம்.

புதினா :

புதினா இலையின் சாறை எடுத்து அதனை கண்களுக்கு கீழ் மற்றும் மேற் பகுதியில் தடவி சுற்றி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகம் அலச வேண்டும். இதனை நேரம் கிடைக்கும் போதெல்லாம் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

பாதாம் ஆயில்:

இதனை தூங்க செல்வதற்கு முன் பாதாம் ஆயிலை கண்களுக்கு கீழே தடவி கண்களை சுற்றி 15 முறை மசாஜ் செய்து விட்டு படுக்க வேண்டும்.

இவைகளை தினமும் அல்லது அல்லது வாரத்தில் இரு முறை தொடர்ச்சியாக செய்து வந்தாலே கண்களுக்கு கீழ் இருக்கும் கருவளையம் காணாமல் போகும். நீங்களும் இவைகளை பின்பற்றி வித்தியாசத்தை உணருங்கள்!

click me!