தலைக்கு குளிக்கும்போது எப்போதுமே முதலில் சூடான நீரில் குளிப்பது நல்லது. அப்போதுதான் உச்சந்தலையில் குவிந்திருக்கும் எண்ணெய், அழுக்குகள் நீங்கும். ஆனால் அதிக சூடான நீரில் அல்ல. அதிக சூடான நீரில் குளித்தால் உச்சந்தலையில் இருக்கும் இயற்கையான எண்ணெய்கள் நீங்கிவிடும். முடியும் வறண்டு போகும்.
26
நேரடியாக ஷாம்பு பயன்படுத்தாதே
நேரடியாக தடவுவதற்கு பதிலாக முதலில் குளிக்கும் கப்பில் கொஞ்சமாக அதனுடன் நிறைய தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து எப்போதும் போல ஷாம்பு போட்டு குளிக்கவும். இப்படி நீங்கள் ஷாம்பு போட்டு குளிப்பதன் மூலம் ஷாம்புவில் இருக்கும் ரசாயனங்களில் விளைவு குறையும். அதுபோல ஷாம்பு போடும்போது விரல் நுனியால் உச்சந்தலையை மெதுவாக மசாஜ் செய்யவும். இதனால் ரத்த ஓட்டம் மேம்படும் அழுக்குகளும் முழுமையாக நீங்கும்.
36
சல்பேட் இல்லாத ஷாம்பூ
சல்பேட் ஷாம்புகள் முடியிலிருந்து ஈரப்பதத்தை அகற்றி உச்சந்தலையை வறட்சியைக்கிவிடும். எனவே சல்பேட் இல்லாத ஷாம்பூவை பயன்படுத்துங்கள். அதுதான் உச்சந்தலையில் இருக்கும் ஈரப்பதத்தை பராமரிக்க உதவும்.