வேலைக்கு போய் விட்டு வருபவர்கள் தினசரி இரவு கால்களை வெதுவெதுப்பான நீரில் சிறிது உப்பை சேர்த்து,5 நிமிடம் ஊற வைக்க வேண்டும். இதனால் பாதங்களில் இருக்கும் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் நீங்கிவிடும். பிறகு மென்மையான பிரஸ் வைத்து பாதங்களை தேய்க்க வேண்டும். இதனால் பாதங்களின் மூலைமுடுக்குகளில் உள்ள அழுக்குகளும் முற்றிலும் நீங்கிவிடும். பாதங்களை சுத்தம் செய்த பின்னர், எலுமிச்சையை வைத்து, பாதங்களில் ஒரு முறை நன்கு தேய்த்துவிட வேண்டும். முக்கியமாக நகங்களில் தேய்க்க வேண்டும். இதனால் நகங்கள் நன்கு வெண்மையோடு காணப்படுவதோடு, கால்களும் சுத்தமாக இருக்கும். இரவு நன்றாக உறக்கம் வரும்.