அடர்த்தியான, கருமையான மற்றும் நீண்ட கூந்தலை தான் நம் அனைவருமே விரும்புவோம். ஆனால் இன்றைய காலகட்டத்தில் மன அழுத்தம், மாசுபாடு, ஆரோக்கியமற்ற உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறையால் முடி உதிர்தல், உடைதல், நரைத்தல், வறண்டு போகுதல் போன்ற கூந்தல் தொடர்பான பல பிரச்சனைகளை சந்திக்கிறோம். இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட தேங்காய் எண்ணெய் மிகவும் உதவியாக இருக்கும்.
ஆம், தேங்காய் எண்ணெயை முடியின் வேர்கள் வரை ஆழமாக தடவினால் தலைமுடி ஆரோக்கியமாக வளரும். முடி உதிர்தலும் குறையும். மேலும் இதில் இருக்கும் தலைமுடியை வலிமையாக்கும். இருப்பினும் தேங்காய் எண்ணெயுடன் சில பொருட்களை சேர்த்து ஹேர் மாஸ்காக பயன்படுத்தி வந்தால் தலைமுடியை பட்டு போல மென்மையாகவும், பளபளப்பாகவும் மாறும். இப்போது இந்த பதிவில் தேங்காய் எண்ணெய் ஹேர் மாஸ்குகள் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.