தங்கம் என்றாலே பெண்களுக்கு அலாதி பிரியம் என்றே சொல்லலாம். விதவிதமான தங்க நகைகள் அணிந்தாலும் அவர்கள் மனம் ஒருபோதும் திருப்தி அடையாது என்றே சொல்லலாம். இப்படி இருக்கையில் இன்றைய நாகரீகத்தில், பல பெண்கள் தங்கள் கால்களில் தங்கத்தில் கொலுசு மற்றும் மெட்டி அணிந்திருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். உங்களுக்கு தெரியுமா.. இந்து மதத்தில் தங்க நகைகளை அணிவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுவதால், தங்க கொலுசு மற்றும் மெட்டியை காலில் அணிவது நல்லதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் இது ஏன் என்று இப்போது தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
ஜோதிட நம்பிக்கைகளின்படி, தங்க நகைகள் லட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், காலில் தங்கக் கொலுசு, மெட்டி அணிவது நல்லதல்ல. மீறினால், லட்சுமி தேவி அவமதிக்கப்படுகிறாள். அதுமட்டுமின்றி, விஷ்ணு பகவானும் உங்கள் மீது கோபப்படுவார். இந்த காரணத்திற்காக, உங்கள் காலில் தங்கக் கொலுசு மற்றும் மெட்டி அணிய வேண்டாம் என்று சொல்லப்படுகிறது.
அதுபோல, காலில் கொலுசு போடும் இடமானது கேது ஸ்தலமாகக் கருதப்படுகிறது. இந்த காரணத்திற்காக, உங்கள் காலில் தங்கக் கொலுசுகளை அணிய வேண்டாம் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் அவை உங்கள் வெப்பநிலையை அதிகரிக்கும். கேதுவில் குளிர்ச்சி இல்லை என்றால், நீங்கள் எப்போதும் எதிர்மறையான விஷயங்களைப் பற்றியே சிந்திக்கிறீர்கள் என்று ஒரு நம்பிக்கை உள்ளது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D