பல தமிழ் நெஞ்சங்களை தன்னுடைய இசையால் கொள்ளை கொண்டவர் இசைஞானி இளையராஜா. இவருடைய மகன் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, ஆகிய இருவருமே இசை துறையில் பணியாற்றி வருகின்றனர். கார்த்திக் ராஜா, இளையராஜாவுக்கு உதவியாளராக இருந்து கொண்டே... ஒரு சில படங்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளார். ஆனால் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.
Singer bhavatharini
இந்நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக பவதாரிணி உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த நிலையில், கடந்த மாதம் இவருக்கு கல்லீரல் புற்றுநோய் நான்காவது ஸ்டேஜில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பவதாரணி இயற்கை முறையில் கேன்சருக்கான சிகிச்சை பெற இலங்கைக்கு சென்றார். மேலும் இளையராஜா, கார்த்திக் ராஜா, ஆகியோரும் பவதாரிணி உடன் இருந்தனர். இளையராஜாவின் இசை கச்சேரியும், இலங்கையில் 28ஆம் தேதி நடைபெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
Bhavatharini Songs
இலங்கையில் இருந்து, இன்று மாலை பவதாரிணியின் உடல்... சென்னை வந்தடையும் என்றும், மாலை 6 மணி அளவில் தி.நகரில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்க வைக்கப்படும் என்கிற தகவல் வெளியானது.
'மாரிசன்' படப்பிடிப்பில் இருந்து வந்ததுமே இந்த செய்தி தன்னை நிலைகுலைய செய்து விட்டதாகவும், பவதாரிணியின் இறப்பு செய்தியை கேட்ட பின்னர் ஒன்றுமே புரியவில்லை என கண்ணீர் மல்க கூறியுள்ளார். 47 வயசு தான் ஆகுது.. இது சாகுற வயசா? இவ்வளவு சீக்கிரம் கடவுள் அந்த குழந்தையை அழைத்து கொண்டார், என குரல் கம்மி பேசியுள்ள வடிவேலு பவதாரிணியின் மறைவு செய்தியை கேட்டு ஒட்டுமொத்த தமிழர்களுமே நொறுங்கிப் போய் விட்டதாகவும், தைப்பூச நாளில் அந்த குழந்தை முருகப்பெருமானின் காலடியில் இளைப்பாறுவார் என தெரிவித்துள்ளார். மேலும் அவருடைய ஆத்மா சாந்தி அடைய தன்னுடைய குலதெய்வம் அய்யனார், கருப்பசாமி, சிவன் போன்ற தெய்வங்களை வேண்டுவதாகவும் வடிவேலு தெரிவித்துள்ளார்.