Anushka
கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் தான் அனுஷ்கா ஷெட்டி. இவரின் ஒரிஜினல் பெயர் ஸ்வீட்டி ஷெட்டி, பின்னர் சினிமாவுக்கு வந்த பின்னர் தன்னுடைய பெயரை அனுஷ்கா ஷெட்டி என மாற்றிக்கொண்டார். இவர் கடந்த 2005-ம் ஆண்டு பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளிவந்த சூப்பர் திரைப்படம் மூலம் தெலுங்கு திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். படத்தின் தலைப்பை போல் படமும் சூப்பர் ஹிட் ஆனதால் அனுஷ்காவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன.
Anushka Shetty
டோலிவுட்டில் பிசியாக இருந்த அனுஷ்காவை தமிழ் சினிமாவுக்கு அழைத்து வந்தது இயக்குனர் சுந்தர் சி தான். அவர் இயக்கிய ரெண்டு படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்த அனுஷ்கா, அதன்பின்னர் விஜய்க்கு ஜோடியாக வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம் சீரிஸ், அஜித் ஜோடியாக என்னை அறிந்தால், ரஜினியுடன் லிங்கா என அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து கோலிவுட்டிலும் டாப் நாயகியாக வலம் வந்தார்.
Anushka salary
நடிகை அனுஷ்காவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் அது அருந்ததி மற்றும் பாகுபலி தான். இந்த இரண்டுமே வரலாற்று கதையம்சம் கொண்ட படங்கள், இதில் தன்னுடைய அசாத்திய நடிப்பால் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார் அனுஷ்கா. அதிலும் பாகுபலி படத்தில் இடம்பெற்ற தேவசேனா கதாபாத்திரத்தில் தன்னைவிட யாரும் சிறப்பாக நடித்துவிட முடியாது என சொல்லும் அளவுக்கு நடித்து அப்ளாஸ் வாங்கினார்.
Anushka car collection
தற்போது நடிகை அனுஷ்காவுக்கு 43 வயது ஆகிறது. இருப்பினும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் முரட்டு சிங்கிளாகவே இருக்கிறார். இவரைப்பற்றிய காதல் கிசுகிசுக்கள் அவ்வப்போது கசிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக அனுஷ்காவும், பிரபாஸும் காதலிப்பதாக நீண்ட நாட்களாக செய்திகள் உலா வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் தாங்கள் நண்பர்கள் எனக்கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். பின்னர் அவர் தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் வதந்தி பரவியது.
Anushka Shetty Net Worth
தற்போது சினிமாவில் மார்க்கெட் இல்லாவிட்டாலும், நடிகை அனுஷ்காவின் சொத்து மதிப்பு தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிவிடுவீர்கள். அவரின் தற்போதைய சொத்து மதிப்பு ரூ.130 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நடிகை அனுஷ்கா ஒரு படத்துக்கு ரூ.5 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறாராம். அதுமட்டுமின்றி விளம்பரங்களில் நடிக்க அவருக்கு ரூ.1 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறதாம்.