கோலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய 73 வயதிலும்... மிகவும் பரபரப்பாக சினிமாவில் நடித்து வருகிறார். தற்போது 'ஜெய்பீம்' பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 80 சதவீதத்திற்கு மேல் முடிவடைந்து விட்ட நிலையில்... இறுதிக்கட்ட படப்பிடிப்பில் படக்குழு கவனம் செலுத்தி வருகிறது.
இந்த படத்தை முடித்த கையேடு, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் ரஜினிகாந்த் இணைய உள்ளார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் துவங்கி விட்ட நிலையில், அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தன்னுடைய பிஸியான ஷெடியூலில், தற்போது தன்னுடைய நண்பரும் 2.0 திரைப்படத்தில் கிரியேட்டிவ் புரடியூசராக பணியாற்றிய ராஜு மஹாலிங்கம் கட்டியுள்ள புதிய வீட்டின் கிரஹப்பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார். மே 5-ஆம் தேதி நடந்த இந்த நிகழ்வு குறித்த புகைப்படத்தை, ராஜு மஹாலிங்கம் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரஜினிகாந்துக்கு உணர்வு பூர்வமான நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, "நான் என் வீட்டு கிரஹப்ரவேசத்திற்கு அழைத்தேன், அவர் எப்போதாவது வருவேன் என்று உறுதியளித்தார். மில்லியன் கணக்கானவர்கள் அவரைப் பார்க்க ஏங்குகிறார்கள். ஆனால் திடீர் என வந்து என் விருப்பத்தை நிறைவேற்றினார். என் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை..... நன்றி தலைவா என தெரிவித்துள்ளார்.
Singer Mano: 'லெவன்' படத்திற்காக டி.இமான் இசையில்... முதல் முறையாக பாடிய பாடகர் மனோ!