கோடை காலம் வந்தாலே பலருக்கு சூரிய ஒளி மற்றும் வியர்வை காரணமாக தோல் வெடிப்பு அல்லது ஒவ்வாமை ஏற்பட தொடங்குகிறது. இதற்காக பல வகையான மருந்துகளையும், கிரீம்களையும் பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்காது. எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் சருமத்தை பராமரிப்பது மிகவும் அவசியம். இதற்கு நீங்கள் சில வீட்டு முறைகளை பின்பற்றினால் மட்டும் போதும்.
ஒவ்வாமைக்கான காரணம்: கோடை வெயில் தாக்கத்தால், சருமம் மோசமாக வறண்டு போகும். அதே நேரத்தில் வியர்வை மற்றும் தூசி காரணமாக சருமத்தில் சிவப்பு திட்டுகள், பருக்கள் அல்லது சொறி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
கற்றாழை: கோடை வெயில் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் அலர்ஜியை போக்க கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம். இதற்கு அலர்ஜி இருக்கும் இடத்தில் கற்றாழை ஜெல்லை தடவினால் விரைவில் நிவாரணம் கிடைக்கும்.
தயிர்: கோடை வெயில் தாக்கத்தால் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்பட்டால் தயிரை பயன்படுத்துங்கள். இது உங்களுக்கு நல்ல நிவாரணம் தரும். எனவே, பாதிக்கப்பட்ட இடத்தில் தயிரை தடவினால் குளிர்ச்சி ஏற்படும். இது ஒரு இயற்கை சுத்திகரிப்பாக செயல்படுகிறது.
கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெய்: கற்பூரம் மற்றும் தேங்காய் எண்ணெயை கோடையால் சருமத்தில் ஏற்படும் சொறியை நீக்க பயன்படுத்தலாம். இதற்கு கற்பூரத்தை அரைத்து தேங்காய் எண்ணெயில் கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் அதை தடவினால் நிவாரண கிடைக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
படிகாரம்: கோடை தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் அலர்ஜி, அரிப்பு அல்லது சொறியை போக்க படிகாரத்தை பயன்படுத்தலாம். எனவே, நீங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் படிகாரத்தை தடவினால் அலர்ஜி, சொறி, அரிப்பிலிருந்து நிவாரணம் கிடைக்கும். மேலும் நீங்கள் விரும்பினால் தேங்காய் எண்ணெயும் கலந்து தடவலாம்.