சன் டிவியில் இயக்குனர் திருமுருகன் இயக்கத்தில், ஒளிபரப்பாகிய பிளாக்பஸ்டர் தொடரான 'நாதஸ்வரம்' சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி ஷண்முக பிரியா. இயக்குனர் திருமுருகன் ஏற்று நடித்த கோபி கதாபாத்திரத்தில், அவரின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார் ஸ்ருதி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து கல்யாணப் பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற பல ஹிட் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
திருமணத்துக்கு பின்னர் இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வாழ்ந்து வந்தனர். ஸ்ருதியும் சீரியலில் இருந்து முழுமையாக விலகி தன்னுடைய குடும்பத்தை கவனித்து வந்தார்.
மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஸ்ருதியின் தலையில் இடியை இறக்கியது போல்... அமைந்தது இவருடைய கணவர் அரவிந்த் சேகரின் எதிர்பாராத மரணம். ஃபிட்னஸ் மீது அதிக அக்கறை கொண்ட கொண்ட அரவிந்த் சேகர், மாரடைப்பால் உயிரிழந்த பின்னர், அவ்வப்போது தன்னுடைய கணவரின் நினைவாக சில பதிவுகளை போட்டு வந்த ஸ்ருதி ஷண்முக பிரியா... கணவர் தன்னுடன் தான் இருக்கிறார் என கூறி வந்தார். மேலும் கணவரின் மரணத்தில் இருந்து வெளியே வர பல்வேறு இடங்களுக்கு செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்.
Goundamani : ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்திற்காக 8 மணி நேரம் டப்பிங் பேசி அசர வைத்த கவுண்டமணி
இந்நிலையில் கணவர் இறந்த ஏழே மாதத்தில், மீண்டும்... சீரியலில் நடிக்க வந்துள்ளார். அதாவது சன் டிவியில் சஞ்சீவ் மற்றும் ஸ்ருதி நடிப்பில் ஒளிபரப்பாக உள்ள, 'லட்சுமி' சீரியலில் ஸ்ருதியின் தோழி கேரக்டரில், ஸ்ருதி ஷண்முக பிரியா நடிக்க கமிட் ஆகியுள்ளார். இதை தொடர்ந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.