Sreenidhi: சிம்புவை நினைத்து பித்து பிடித்த ஸ்ரீநிதி...கடைசியில் சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...

First Published Jun 22, 2022, 11:24 AM IST

TV Serial Actress Sreenidhi Suffer Depression admitted to Hospital: சிம்புவை கல்யாணம் பண்ண ஆசைப்பட்ட ஸ்ரீநிதி, சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைத்துள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

sreenidhi

கடந்த 2012ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு அல்லது 7சி என்ற சீரியலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீநிதி. இதையடுத்து, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர். அடுத்தடுத்து இவரது நடிப்பு திறமையால், ரோமாபுரி பாண்டியன், பகல் நிலவு, வள்ளி, என பல சீரியல்களில் நடித்து நடித்துள்ளார்.

sreenidhi

அதனை தொடர்ந்து,  ஜீ தமிழில் ஒளிப்பரப்பான யாரடி நீ மோகினி மற்றும் புதுப்புது அர்த்தங்கள் சீரியல்கள் இவர் நடித்த ரோல் ரசிகர்களின் கவனத்தை பெற்றது. சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகின்றனர். அந்த வரிசையில் இணைந்த ஸ்ரீநிதி. கடந்த சில வாரங்களாக இன்ஸ்டாகிராமில் பரபரப்பை ஏற்படுத்தும் பல பதிவுகளை போட்டு வருகிறார். வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது. அதற்கு பிறகு சில மாதங்கள் கழித்து தான் மன அழுத்தத்தில் இருப்பதாக அழுது கொண்டே வீடியோ வெளியிட்டார். 

sreenidhi

இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீநிதி தன்னை திருமணம் செய்துகொள்ளக் கோரி நடிகர் சிம்பு வீட்டின் முன் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு சிம்புவைத் தவிர நான் வேறு யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்றார். ஸ்ரீநிதியின் இந்த பதிவை தொடர்ந்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் எழுந்தது.  தொடர்ந்து, சில நாட்கள் கழித்து சீரியல் நடிகை நட்சத்திரா உயிருக்கு ஆபத்து என வீடியோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். 

sreenidhi

இதையடுத்து, அவரது அம்மா அளித்த பேட்டியில், ஸ்ரீநிதி டிப்ரஷனில் இருப்பதாலே இப்படியெல்லாம் பேசுவதாகவும், அவரை யாரும் திட்ட வேண்டாமென்றும் கோரிக்கை வைத்திருந்தார். இவருக்கு நெருக்கமானவர்கள் பலரும் ஸ்ரீநிதி மன அழுத்தத்தில் இருப்பதாக கூறி வந்தனர். 
 

sreenidhi

இந்த நிலையில் தற்போது, ஸ்ரீநிதி சென்னை புறநகரான புழல் பகுதியில் அமைந்துள்ள ஒரு சிகிச்சை மையத்தில் கவுன்சிலிங் மற்றும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஆபத்து பெரிதாக இல்லை என்றும், ஒரு சின்ன ரிலாக்ஸ்சேஷனுக்காக இந்த கவுன்சிலிங்கில் என்றும் விரைவில் அவர் மீண்டும் வீடு திரும்புவார் என நண்பர்கள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதாக இணையத்தில் செய்திகள் உலா வருகின்றனர்.

 மேலும் படிக்க....Vijay Birthday: விஜய்யை நம்பர் 1 இடத்திற்கு உயர்த்திய ஐகானிக் திரைப்படங்கள்...வசூல் நாயகன் பிறந்தநாள் ஸ்பெஷல்

click me!