அதாவது மாயா மொட்டை மாடியில் இருக்க சீனுவை வீட்டிற்கு அழைத்து வருகின்றனர். அவனுக்கு ஆரத்தி எடுத்து உள்ளே கூட்டி வருகின்றனர். பத்மா, பார்வதி, ஷாரு ஆகியோர் இனிமே மாயாவையும் சீனுவையும் நெருங்க விட கூடாது என்று முடிவெடுக்கின்றனர்.
இந்த இரண்டு ஜாதகத்துக்கு சுத்தமா பொருத்தம் இல்ல, நீங்க என்ன தான் முயற்சி பண்ணாலும் இந்த கல்யாணம் நடக்காது என்று அதிர்ச்சி கொடுக்கிறார் ஜோதிடர். இதனையடுத்து இவர்கள் மூவரும் வீட்டிற்கு வர ஜானகி அணையா தீபத்துக்கு பூஜை செய்து கொண்டிருக்க மாயா தனம் ஆகியோர் காலேஜ் கிளம்பி வருகின்றனர்.
சீனு என்ன பிரச்சனை என்று கேட்க பத்மா ஜோதிடர் சொன்னதை சொல்ல இந்த கல்யாணம் நடக்கும், கவலைப்படாதீங்க என்று ஆறுதல் சொல்கிறான், இந்த கல்யாணம் நடக்கலனா உன் மாமாவோட கௌரவமே போய்டும் என்று போய் விடும் என்று சொல்ல சீனு கண்டிப்பாக நடக்கும் எந்த பிரச்னையும் வராது என்று வாக்கு கொடுக்கிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.