அதாவது, லிங்கம் ஆறுதல் சொல்வது போல் டிராமா போட்டு நான் போய் சிவராமனை கூட்டி வரேன் என்று கிளம்ப ரகுராம் எங்க சந்தோஷத்தில் மட்டும் பங்கெடுத்துகோங்க, இந்த விஷயத்தை நாங்களே பார்த்துக்கறோம், நீங்க தலையிடாதீங்க என்று சொல்ல பார்வதி நீங்களும் அவரை காப்பாத்த எதுவும் செய்யல, செய்ய வரவங்களையும் தடுக்கறீங்க என்று கோபப்பட்டு உடைந்து அழுகிறாள்.
அடுத்து சிவராமனை மீண்டும் மரத்தில் கட்டி போட மாயாவும் சீனுவும் யாருக்கும் தெரியாமல் அங்கு வர சிவராம் நீங்க இங்க எல்லாம் வர கூடாது என்று சொல்ல மாயா என்ன நடந்ததுன்னுசொல்லுங்க , இல்லனா உங்க மேல பழி போட்ட மாதிரி அடுத்தடுத்து எல்லார் மேலயும் ஒரு பழியை போட்டு குடும்பத்தை அசிங்கப்படுத்த பார்ப்பாங்க என்று சொல்கிறாள்.
அதன்பிறகு சிவராமன் பொன்னுத்தாயினு ஒரு பொண்ணு வண்டியை நிறுத்தி புருஷனுக்கு பாம்பு கடிச்சி உயிருக்கு போராடுறானு வீட்டிற்கு கூட்டி போச்சு, உள்ளே போனதும் கதவை சாற்றி புடவையை களைத்து போட்டு சத்தம் போட எல்லாரும் தப்பா நினைச்சிட்டாங்க என்று நடந்தவற்றை சொல்ல அதை கேட்டு அதிர்ச்சி அடைகின்றனர். பிறகு எந்த ஊருல, எங்க நடந்தது என்ற விவரங்களை கேட்டு கொள்கின்றனர். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
ஸ்ரீதேவி முதல்... அமலா பால் வரை! திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான முன்னணி தமிழ் நடிகைகள் இத்தனை பேரா?