ஒன்னுமே பண்ண முடியல; சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த டான் சர்மா – டிரெஸிங் ரூமில் கண்ணீர் விட்டு அழுத ரோகித்!

First Published May 7, 2024, 11:12 AM IST

வான்கடே மைதானத்தில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது ரோகித் சர்மா கண்ணீர்விட்டு அழுத காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான 55ஆவது லீக் போட்டி வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியானது 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

பின்னர் கடின இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாடி சதம் விளாசி சாதனை படைத்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இந்தப் போட்டியில் ரோகித் சர்மா 4 ரன்களில் ஆட்டமிழந்து சோகத்துடன் வெளியேறினார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

அதன் பிறகு போட்டி நடைபெற்று கொண்டிருக்கும் போதே கேமரா அவர் பக்கம் திரும்பியது. தொடர்ந்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சோகத்துடனே காணப்பட்டார். இந்த தொடரில், 43, 26, 0, 49, 38, 105*, 36, 6, 8, 4, 11, 4 என்று மொத்தமாக 330 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

கடைசி 5 போட்டிகளில் 6, 8, 4, 11, 4 என்று சொற்ப ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். முதல் 6 போட்டிகளில் ஓரளவு சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா, கடைசி 6 போட்டிகளில் 33 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

Mumbai Indians vs Sunrisers Hyderabad, 55th Match

வரும் ஜூன் 1 ஆம் தேதி தொடங்க இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் கேப்டனாக இடம் பெற்றுள்ள நிலையில் இப்படி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். மேலும், தான் இப்படி விளையாடியது குறித்து கண்கலங்கி அழுதுள்ளார். இது தொடர்பான காட்சிகள் தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

click me!