மற்றொரு பிரம்மாண்ட விழாவை நடத்திய முகேஷ் அம்பானி.. இந்த முறை எதற்காக தெரியுமா?

First Published Apr 11, 2024, 10:29 AM IST

முகேஷ் அம்பானி ஜாம்நகரில் மற்றொரு பிரம்மாண்ட விழாவை நடத்தி உள்ளார்.

பிரபல தொழிலதிபரும், ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானி சமீபத்தில் ஜாம்நகரில் தனது மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வுகளை பிரம்மாண்டமாக நடத்தினார். இந்த விழாவில் கோடீஸ்வரர்கள் முதல் திரைப்பட நட்சத்திரங்கள் வரை, உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வின் வீடியோக்கள் இணையம் முழுவதும் பரவின. இந்த நிலையில் முகேஷ் அம்பானி ஜாம்நகரில் மற்றொரு பிரம்மாண்ட விழாவை நடத்தி உள்ளார்.

Brooches

ஆம். தனது மகன் ஆனந்த் அம்பானி நேற்று தனது 29 வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் ஜாம்நகரில் அம்பானி குடும்பம் ஒரு பெரிய நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தது..

சல்மான் கான், , ஷிகர் பஹாரியா மற்றும் மீசான் ஜாஃப்ரி உள்ளிட்ட பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர். அதே போல் பிரபல பாடகர் பி பிராக்கும் இந்த சிறப்பு விழாவில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் சமீபத்திய வீடியோவை வரீந்தர் சாவ்லா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரன்பீர் கபூர் நடித்த மெகா பிளாக்பஸ்டர் படமான அனிமல் படத்தின் சாரி துனியா ஜலா டெங்கே பாடலை பி பிரக் பாடுவதை இந்த வீடியோவில் காணலாம். அவருடன் சல்மான் கானும் சேர்ந்து பாடுகிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முகேஷ் அம்பானியின் பிள்ளைகளில் ஆனந்த் அம்பானி இளையவர். இந்தியாவின் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், இஷா அம்பானி, ஆகாஷ் அம்பானி மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் அடக்கமான நடத்தை மற்றும் மரபுகளுக்கு பெயர் பெற்றவர்கள்.

ஆனந்த் அம்பானி பிரவுன் பல்கலைக்கழகத்தில் தனது படிப்பை முடித்துவிட்டு இப்போது ரிலையன்ஸ் நியூ எனர்ஜி பிசினஸை கவனித்து வருகிறார். இவர் ரிலையன்ஸ் 02சி மற்றும் ரிலையன்ஸ் நியூ சோலார் எனர்ஜியின் இயக்குனர் பதவியில் உள்ளார். ஆனந்த் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் 3 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

click me!