கார்த்திகை தீபம் சீரியல் : ஆனந்துக்கு விபூதி அடிக்க பார்த்த ரியா... வசமாக சிக்க வைத்து தீபா கொடுத்த ட்விஸ்ட்

First Published May 2, 2024, 3:26 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு கையில் காயம் ஏற்பட அபிராமி பதறிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் கார்த்திக்கு கையில் காயம் ஏற்பட அபிராமி பதறிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, வீட்டிற்கு வரும் ஜோசியர் ஆனந்த் உயிருக்கு ஆபத்து இருக்கு, அவருடைய மனைவி ரியா தான் பரிகாரம் பண்ணனும் என்று செல்ல, ஆனந்த் அங்கிருந்து கிளம்பி சென்றதும் தீபா அபிராமியிடம் அந்த ஜோசியர் டூப் தான், நான் தான் வர சொன்னேன் என்று சொல்கிறாள். 

Zee Tamil Karthigai deepam serial

அதன் பிறகு ரியாவிடம் சென்று ஆனந்துக்காக பரிகாரம் பண்ணனும் என்று சொல்ல, அவள் என்னால அதெல்லாம் பண்ண முடியாது என்று சொல்கிறாள். பிறகு ஆனந்தை கூப்பிட்டு உனக்காக பரிகாரம் பண்ண முடியாதுனு சொல்றாங்க என்று போட்டு கொடுத்து விடுகிறார்கள். மேலும் அபிராமி சரி விடுப்பா நான் மீனாட்சி கிட்ட சொல்றேன், உனக்காக அவ கண்டிப்பா பண்ணுவாள் என்று சொல்கிறாள். இதனை தொடர்ந்து ஆனந்த் அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல, எனக்காக ரியா பண்ணுவா என்று வாக்கு கொடுக்க, வேறு வழியின்றி ரியா ஒப்பு கொள்கிறாள். 

இதையும் படியுங்கள்... ஆரம்பித்த வேகத்தில் முடிவுக்கு வரும் ஜீ தமிழ் சீரியல்... மீண்டும் அதிரடியாக டைம் மாறும் பேவரைட் சீரியல்கள்

Karthigai deepam serial Update

அடுத்து ஐஸ்வர்யா ரியாவிடம் நீ ஒன்னும் கவலைப்படாத ஆனந்த் கோவிலுக்கு எல்லாம் வர மாட்டான், அங்க பரிகாரம் செய்ய முடியாதுனு சொல்லிடலாம் என்று ஐடியா கொடுக்கிறாள். அடுத்து தீபா கார்த்திக்கு சாப்பாடு கொண்டு வர, சிம்பிளாக வந்த அவளை பார்த்து செக்யூரிட்டி கார்த்திக் மனைவின்னு நம்ப முடியாமல் உள்ளே விட மறுக்க, அருண் இதை பார்த்து தீபாவை உள்ளே அழைத்து செல்கிறான், அடுத்து கார்த்திக் எல்லாருக்கும் தீபாவை அறிமுகம் செய்து வைத்து அவளை பாட்டு பாடவும் வைக்கிறான்.

Karthigai deepam serial Today Episode

அதே போல் கோவிலுக்கு வந்த ரியா கடைசி நேரத்தில் பரிகாரம் செய்ய முடியாது, உன்னால முடிந்ததை பார்த்துக்க என்று சொல்ல, தீபா ஆனந்தை கூப்பிட்டு நிற்க வைத்து ஷாக் கொடுக்கிறாள். இதனால் ரியா சிக்கி கொள்ள, அவளை அங்கபிரதர்சனம் செய்ய வைத்து கையில் தீ சட்டியை கொடுக்க, ரியா சூடு தாங்காமல் தவிக்கிறாள். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... முன்னாள் முதல்வரின் பேரனோடு நின்று போன திருமணம்.! வயசாகிடுச்சு என்று கரு முட்டையை சேமிக்கும் தனுஷ் பட நாயகி!

click me!