தற்கொலைக்கு முயன்ற ரியா... ஐஸ்வர்யாவின் சதியால் கண்கலங்கிய தீபா - கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

First Published Mar 5, 2024, 3:59 PM IST

கார்த்திகை தீபம் சீரியலில் நேற்றைய எபிசோடில் பேப்பரில் நியூஸை பார்த்து அபிராமி பயங்கர கடுப்பாகிய நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம். 

Karthigai deepam serial

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம் இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பேப்பரில் நியூஸை பார்த்து அபிராமி பயங்கர கடுப்பாகிய நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

அதாவது, கார்த்திக் தீபா மேல தப்பு இருக்க வாய்ப்பில்ல, அவங்க நடந்தது எல்லாத்தையும் என்கிட்டே சொன்னாங்க. ரக்சன் டிராப் பண்ண தான் வந்தாரு என்று தீபாவுக்கு ஆதரவாக பேச அபிராமி ஜோசியர் சொன்னதை நினைத்து பார்த்து எதுவும் பேசாமல் அமைதியாகி விடுகிறார். 

Zee Tamil Karthigai deepam serial

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யாவும் ராஜேஸ்வரியும் சேர்ந்து அபிராமியை ஏற்றி விட அபிராமி இதுல உங்களுக்கு என்ன பிரச்சனை?? உங்க வேலையை மட்டும் பாருங்க என்று திட்டி விடுகிறாள். தீபாவுக்கு எதிரா கொளுத்தி போடுறது தான் உங்க வேலையா என்று கோபப்படுகிறாள். 

மறுபக்கம் தீபா ரூமுக்குள் எனக்கு இந்த பாட்டும் வேணா, புகழும் வேண்டா என்றும் கண்ணீர் விட்டு அழ கார்த்திக் இதெல்லாம் நீங்க பாட கூடாதுனு நடக்குற சதி, இதற்கெல்லாம் கவலை பட்டு உட்கார கூடாது. நீங்க பாடணும், உங்க பாட்டால் ஜெயித்து காட்டணும் என மோட்டிவேஷனலாக பேச தீபா கடைசியாக பாடுறேன் என்று சம்மதம் சொல்கிறாள். 

இதையும் படியுங்கள்... கொடுமைப்படுத்தும் முத்துப்பாண்டி... இசக்கிக்காக போலீஸில் புகாரளிக்க சென்ற பரணி - அண்ணா சீரியல் டுவிஸ்ட்

Karthigai deepam serial Update

மறுபக்கம் தர்மலிங்கம் உடம்பு முடியாமல் ஹாஸ்பிடல் வர அவருக்கு மைல்டு அட்டாக் என்பது தெரிய வருகிறது, டாக்டர்கள் உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று சொல்ல தர்மலிங்கம் இப்போதைக்கு பணம் இல்ல, 4 மாசம் கழிச்சி ஆபரேஷன் செய்துகிறேன். இப்போதைக்கு மருந்து மாத்திரை மட்டும் எழுதி கொடுக்க சொல்கிறார். 

Karthigai deepam serial Today Episode

அடுத்து ஆனந்த் போனை ஆன் பண்ண ரியா 150 முறை போன் செய்திருக்கும் விஷயம் தெரிய வருகிறது. மேலும் ஒரு புது நம்பரில் இருந்து போன் வர ஆனந்த் எடுத்து பேச ரியா சூசைட் அட்டென்ட் செய்து ஹாஸ்பிடலில் இருப்பதாக சொல்ல ஆனந்த் அதிர்ச்சி அடைகிறான். இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... 'குணா' படத்திற்கு பின் ரோஷ்ணி நடிக்காதது ஏன்? 32 வருடங்களுக்கு பின் இயக்குனர் சந்தானபாரதி வெளியிட்ட தகவல்!

click me!